Wednesday, April 11, 2012

சுய மரணம்


வாழ்வினை நன்கு ரசித்தவன்,
இன்று மரணத்தை ருசிக்க முயல்கிறேன் ...
முடிவே, என்னை நீ நெருங்குமுன்
நானே உன்னை அரவணைக்க பயில்கிறேன் ... 

இது நான் தொடங்கும் யாத்திரை
போகாத வழியென்றறிந்தே புறப்பட்டேன் ...
உலக வாழ்வில் இல்லா சுதந்திரம்,
இங்குண்டு என்பதை உணர்ந்திட்டேன் ... 


இது கோழைத்தனம் என்று கூறுவோர்,
எத்தனை பேர் இறந்தவர்கள் ?
இறப்பிற்கு பயந்து வாழ்வது நன்றெனில்,
வாழ்வை உணர்ந்தபின் மரிப்பதும் நன்றே ...


என் பிறப்பைத்தான் நான் தீர்மானிக்கவில்லை,
இறப்பாவது என் முடிவாகட்டும் ...
காதலுக்கும், கடனுக்கும் இறப்பவர்க்கு மத்தியில்,
என் மரணம் விருப்புக்காக இருக்கட்டும் .







No comments:

Post a Comment