Wednesday, April 11, 2012

அம்மா


அன்பே உருவாகி நின்று,
ஆகாரம் அமுதென படைத்து,
இல்லறம் பண்புடன் காத்து,
ஈன்றெடுக்க ஈருயிர் சுமந்து,
உயர் பண்புடன் வளர்க்க,
ஊரார் மெச்சிட இறக்க,
எத்துயரும் தாங்கி நின்று,
ஏனைய ஆசைகள் கொன்று,
ஐந்தறிவை ஆறு என்றாக்கி,,
ஒப்பில்லா உயிர் தந்தாயே,
ஓம்காரம் நீயே தாயே
ஔதாரியத்தின் உருக்கொண்டாயே ...










No comments:

Post a Comment