புராதானங்களுள் ஒன்றாகி விட்டதென் மொழி
தமிழ் ஆதரவாளன் தீவிரவாதியானான்
ஈழம் பேச அனுமதி மறுக்கிறது அரசாங்கம்
தமிழன் என்ற அடையாளமும் இல்லை
என் இனத்தில் பாதியை அழித்தாகிவிட்டது
சாவுக்கு பயந்து சிதறுண்டோம் சில்லரைகளாய்
நடைபிணங்கள் மட்டுமே நடமாடுகின்றன
என் உடன்பிறப்புகள் உயிருடன் புதைக்கப்பட்டும்
இன்னும் நான் இருக்கிறேன் இந்தியனாக
வெட்கம் கெட்ட இறையாண்மையுடன்
No comments:
Post a Comment