உன் காட்டை
இடித்து கட்டிடம் வளர்க்கிறார்கள்,
பூமியின் போர்வையிலே ஓட்டையிட்டு
சிரிக்கிறார்கள்,
இயற்கையே இன்னுமா நீ
உறங்குகிறாய் ????
ஓராயிரம் காரியம் செய்துன்னை
சூடாக்கி,
பனிப்பாறை கரைத்துன்னை அழவைத்த
போதிலும்,
இயற்கையே இன்னுமா நீ
உறங்குகிறாய் ????
காற்றையும் கெடுத்து, கடலையும்
கெடுத்து,
மண்ணையும்
விண்ணையும் புண்ணாக்கிய பின்னும்,
இயற்கையே இன்னுமா நீ
உறங்குகிறாய் ????
வேட்டையாடி கொண்டு வந்து உன்
பிள்ளைகளை,
கொன்று தின்று கொழுத்த பின்னும்,
இயற்கையே இன்னுமா நீ உறங்குகிறாய்
????
நீ வாழக் கொடுத்த இடத்தையெல்லாம்
வாடகைக்கு விட்டுவிட்டு,
உன்னையே இடம் பெயர்க்க
பார்க்கிறார்கள் ...
இயற்கையே இன்னுமா நீ
உறங்குகிறாய் ????
No comments:
Post a Comment